Monday, 13th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: ரயில் நிலைய கடைகளில் கொரோனா தடுப்பு பொருட்கள் விற்பனை செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ரயில் நிலைய நடைமேடைகளில் தனியார் மூலம் நடத்தப்படும் கடைகளில் ரயில் பயணிகளுக்கு தேவையான தண்ணீர், பாக்கெட் உணவுகள், புத்தகங்கள், மருந்துகள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் ரயில் பயணிகளுக்காக கொரோனா தடுப்பு பொருட்கள் விற்பனை செய்யவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
முககவசம், கிருமிநாசினி, கையுறை, படுக்கை விரிப்புகள் போன்றவை அனைத்தும் ரயில் நிலைய கடைகளில் விற்பனை செய்யப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது .நெருக்கடி காலத்தில் பயணிகள் கொரோனா அச்சமின்றி பயணிக்க இது உதவும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.